” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

மாவீரரே

பானுக்கும் பருப்புக்குமே
படையெடுத்தோம் நாம்
கூனிக்குறுகலுக்கு விடைகொடுக்கக் களம்புகுந்தவர் நீவிர்
அதனால் மனம்புகுந்தீர்
மாவீரராய்ச் சிறந்தீர்

பகடுகளை அறுத்தீர்
பருவக்கனவைச் சிதைத்தீர்
உறவுகளை வெறுத்தீர்
உரிமையையே நினைத்தீர்
புறத்தை மறந்தீர்
புடைத்தெழு தோளில்
ஆயுதங்கள் சுமந்தீர்

அச்சத்தைத் துறந்தே
களத்தில் சுழன்றீர்
எஞ்சியவரும் விழித்தெழ
எத்தனங்கள் முளைத்திட
எச்சமமென ஏந்திட
உயிர்கழற்றி விழ்ந்தீர்

எழுகின்ற சுடர்கள்
ஏந்துதே உம்நினைவை
அழுகின்ற கண்ணீரும்
அறைகின்றதே துயரை
தழுவுகின்ற கரங்கள்
வேண்டுதே இறையை

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan