சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

மாவீரரே

பானுக்கும் பருப்புக்குமே
படையெடுத்தோம் நாம்
கூனிக்குறுகலுக்கு விடைகொடுக்கக் களம்புகுந்தவர் நீவிர்
அதனால் மனம்புகுந்தீர்
மாவீரராய்ச் சிறந்தீர்

பகடுகளை அறுத்தீர்
பருவக்கனவைச் சிதைத்தீர்
உறவுகளை வெறுத்தீர்
உரிமையையே நினைத்தீர்
புறத்தை மறந்தீர்
புடைத்தெழு தோளில்
ஆயுதங்கள் சுமந்தீர்

அச்சத்தைத் துறந்தே
களத்தில் சுழன்றீர்
எஞ்சியவரும் விழித்தெழ
எத்தனங்கள் முளைத்திட
எச்சமமென ஏந்திட
உயிர்கழற்றி விழ்ந்தீர்

எழுகின்ற சுடர்கள்
ஏந்துதே உம்நினைவை
அழுகின்ற கண்ணீரும்
அறைகின்றதே துயரை
தழுவுகின்ற கரங்கள்
வேண்டுதே இறையை

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading