மனோகரி ஜெகதீஸ்வரன்

கலவரம்

ஆணவக் கேடு அறிவுத் தீட்டு
ஆகாக் கூட்டு அண்டி அடக்கின்
அங்கு தோன்றும் கலவரம்

அருளைச் சிந்தா அக்கிரம நிலவரம்
இருளைப் பூட்டி
இயக்க மழிபின்
கருக்கொண்டு கருவ
றுக்கும் கலவரம்
மருக்கண்டு மருண்டோடி
மறைந்தோடும் சுகவரம்

தீண்டும் துயரை தடுக்க
தாண்டு வகையறி யாநிலை
நீண்டு செல்லின் நிமிடமும்
மனது காணும் கலவரம்

பிறந்த காதல்
பிறழ்வு காணில்
பிறக்குமங்கு கலவரம்
குளறு மனமும் குழம்பியே உலாவரும்

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading