29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
மனோகரி ஜெகதீஸ்வரன்
ஒவ்வாமை இயலாமை
ஒருவருக்குக்கொருவர் ஆகாமை
நம்பாமை நயக்காமை
நடுநிலைமை இல்லாமை
இல்லாமை ஈயாமை
இதயமில்லாமை இங்கிதமறியாமை
கல்லாமை காசில்லாமை
கம்பீரம் காதலில்லாமை
குஞ்சு குருமனையும்
கூசாது கூடல்
பஞ்சனையில் வீழ்த்திப்
பத்தினியை மேய்தல்
நஞ்சணைய நாகரிக
நங்கையர் கொல்லும்
அஞ்சனவிழி சுழற்றிக்
கேளிக்கை செய்தல்
சூதுவாது வம்பளப்பு
வரும்படிக் குளறுபடி
சாதிநீதிச் சண்டை
சங்கார வெம்மை
பாதிவழிப் பிரிவு
பலபாதக விரிவு
நாதியற்ற நிகழ்வென
நம்மிடத்தில் பலகறைகள்
ஊதித்தள்ள முடியாது
உறைந்து போயுள்ளன.
கறையகற்ற உகந்தது சலவை
கசக்கின் போகும் அனைவரினதும் கவலை
தேவை அதற்கு விழிப்புணர்வு
ஆதலால் வாரீர்
அடைவை நோக்கி
நெஞ்சகச் சந்தில் குந்தி
வஞ்சகம் விதைக்கும் எண்ணங்கள்
பஞ்செனப் பறக்கச்
செய்வோம் சலவை.
மனோகரி ஜெகதீஸ்வரன்.

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...