” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

ஒவ்வாமை இயலாமை
ஒருவருக்குக்கொருவர் ஆகாமை

நம்பாமை நயக்காமை
நடுநிலைமை இல்லாமை

இல்லாமை ஈயாமை
இதயமில்லாமை இங்கிதமறியாமை
கல்லாமை காசில்லாமை
கம்பீரம் காதலில்லாமை

குஞ்சு குருமனையும்
கூசாது கூடல்
பஞ்சனையில் வீழ்த்திப்
பத்தினியை மேய்தல்
நஞ்சணைய நாகரிக
நங்கையர் கொல்லும்
அஞ்சனவிழி சுழற்றிக்
கேளிக்கை செய்தல்

சூதுவாது வம்பளப்பு
வரும்படிக் குளறுபடி
சாதிநீதிச் சண்டை
சங்கார வெம்மை
பாதிவழிப் பிரிவு
பலபாதக விரிவு
நாதியற்ற நிகழ்வென
நம்மிடத்தில் பலகறைகள்
ஊதித்தள்ள முடியாது
உறைந்து போயுள்ளன.

கறையகற்ற உகந்தது சலவை
கசக்கின் போகும் அனைவரினதும் கவலை

தேவை அதற்கு விழிப்புணர்வு

ஆதலால் வாரீர்
அடைவை நோக்கி

நெஞ்சகச் சந்தில் குந்தி
வஞ்சகம் விதைக்கும் எண்ணங்கள்
பஞ்செனப் பறக்கச்
செய்வோம் சலவை.

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan