இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

முகமூடி

சந்தையில் விற்கா முகமூடி
சொந்த முகத்தை
தொலையச் செய்யும் அகம்மூடி
சின்னச் சிறுசுகள் அணியா முகமூடி
பென்னம் பெரிசுகள் அணிகின்றோம்
வகைவகையாய் தேடி

குமுறும் உள்ளத்தை மறைக்க
கூசு மொழிகளைக் கடக்க
நேச மனிதரைக் காக்க
வீசு வதைகளை வீழ்த்த
காசு சொத்துக்களைக் கவர
மோச நிகழ்வுகள் நிகழ்த்த
ஆசா பாசங்களை அனுபவிக்க
பாச வலைகள் வீச
பற்றுகளைப் பதமுறத் தூவ
இல்லாமை இயலாமை மறைக்க
போர்குணங்கள்
வெளித்தெரியா திருக்க
சொல்லாமலே போடுகின்றோம் முகமூடி
கல்லாமலே காலத்துக்கும் ஏற்றபடி
வெல்லுமது சிலவேளை நல்லபடி
செய்யுமது நன்மை வரும்படி
எய்யும் பலதோ குழறுபடி
செய்யும் அதுவும் அனற்குழி

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading