தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

நம்பிக்கை

அழுத்தமான உள்ளுணர்வே நம்பிக்கை
கழுத்தளவு துயரையும்
கடக்கவைப்பது நம்பிக்கை

அனைவரிடமும் இருக்கின்றது ஏதோவொரு நம்பிக்கை
அதில்சிலதைச் சொல்கின்றேன் சிந்திக்க

தொழுதால் கிட்டுமென்ற
நம்பிக்கையே
தொழவைக்கிறது பக்தனை
அழுதால் கிடைக்குமென்ற
நம்பிக்கையே
அழவைக்கின்றது குழந்தையை

விதைத்தால் எழுமென்ற நம்பிக்கையே
வீச வைக்கிறது உழவனை

பசிக்குணவு தருவானென்ற நம்பிக்கையே
பதறாதிருக்கச் செய்கிறது உலகை
பழுத்தால் வீழுமென்ற நம்பிக்கையே பரபரப்பின்றிக் காத்திருக்கச்செய்கின்றது பயனாளிகளை

உதிக்கின்ற சூரியன் சிதறானென்ற நம்பிக்கையே
விடியலைக் காணவைக்கிறது எம்மை

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading