இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

நம்பிக்கை

அழுத்தமான உள்ளுணர்வே நம்பிக்கை
கழுத்தளவு துயரையும்
கடக்கவைப்பது நம்பிக்கை

அனைவரிடமும் இருக்கின்றது ஏதோவொரு நம்பிக்கை
அதில்சிலதைச் சொல்கின்றேன் சிந்திக்க

தொழுதால் கிட்டுமென்ற
நம்பிக்கையே
தொழவைக்கிறது பக்தனை
அழுதால் கிடைக்குமென்ற
நம்பிக்கையே
அழவைக்கின்றது குழந்தையை

விதைத்தால் எழுமென்ற நம்பிக்கையே
வீச வைக்கிறது உழவனை

பசிக்குணவு தருவானென்ற நம்பிக்கையே
பதறாதிருக்கச் செய்கிறது உலகை
பழுத்தால் வீழுமென்ற நம்பிக்கையே பரபரப்பின்றிக் காத்திருக்கச்செய்கின்றது பயனாளிகளை

உதிக்கின்ற சூரியன் சிதறானென்ற நம்பிக்கையே
விடியலைக் காணவைக்கிறது எம்மை

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading