முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில் மூலையில் முடங்கி கிடக்கும் நிலை கண் தெரியாத பாவியாகி விட்டேன் கைப்பிடித்து தெருவில்...

Continue reading

மலரும்அமைதி இல(127) 4/4/24

சஞ்சலம் கவலையென
நித்தமும ஏங்கும் மனம்
மொத்தமாய் வேண்டுவது
அமைதி மன அமைதி

மனதில் அமைதி வேண்டின்
அன்பு எனும் தீபமேற்றி
அகலொளியின் வெம்மையில்
மனமுருக ஆங்கே

தன்னலம் கரைந்தோட
பொதுநலம் சுரக்க
அங்கே மனிதம் மலர்ந்திடுமே
இருந்திடினும்

தேவைகளை விரல் நுனியால்
தேர்ந்தெடுத்து நிறைவு செய்து
சொகுசான வாழ்வு கொண்டு
மனிதன் வாழும் வரை

உணவுடை உறையுளென
ஏங்கும் மனிதர் உள்ளவரை
உலகில் மலர்ந்திடுமோ
அமைதி மன அமைதி
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading