” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மலரும்அமைதி இல(127) 4/4/24

சஞ்சலம் கவலையென
நித்தமும ஏங்கும் மனம்
மொத்தமாய் வேண்டுவது
அமைதி மன அமைதி

மனதில் அமைதி வேண்டின்
அன்பு எனும் தீபமேற்றி
அகலொளியின் வெம்மையில்
மனமுருக ஆங்கே

தன்னலம் கரைந்தோட
பொதுநலம் சுரக்க
அங்கே மனிதம் மலர்ந்திடுமே
இருந்திடினும்

தேவைகளை விரல் நுனியால்
தேர்ந்தெடுத்து நிறைவு செய்து
சொகுசான வாழ்வு கொண்டு
மனிதன் வாழும் வரை

உணவுடை உறையுளென
ஏங்கும் மனிதர் உள்ளவரை
உலகில் மலர்ந்திடுமோ
அமைதி மன அமைதி
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan