அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

மாதவமே உந்தனை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

28.11.24
ஆக்கம் 340
மாதவமே உந்தனை

மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் மாதவமே உந்தனை வணங்கிடுவோம்

தேசியத் தலைவர்
நற்சிந்தனையில்
உதித்து வழி நடத்திய
ஆராதனையைப் போற்றிடுவோம்

வீட்டுக்கு வீடு பெற்று
எடுத்த பிள்ளையில்
கற்றுக் கொடுத்த
நாட்டுப் பற்றினை
பார் போற்ற புகழ்ந்திடுவோம்

நாட்டுக்குத் தன் பிறந்த
மண்ணிற்கு விடுதலை
வேண்டி உழைத்து உயிர் நீத்த மாவீரரே !

காந்தள் மலர் தூவி
மாவீரர் புகழ் பாடி
ஒளித் தீபமேற்றி
நினைந்திடுவோமே

வஞ்சனைச் சூழ்ச்சியே
நிந்தனை செய்த கொடுமையில்
அநியாயமாய்ப்
புதைந்தவரே

உன் கல்லறை கூட
உனக்கு சொந்தம்
இல்லையே
சொந்த மண்ணில் என
வடித்த கண்ணீர், விட்ட
இறுதிப் பெருமூச்சும்
கொடிய புயல், மழை,
இடியுடன் போராடி
ஓடுகிறதோ?

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan