மாதவமே உந்தனை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

28.11.24
ஆக்கம் 340
மாதவமே உந்தனை

மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் மாதவமே உந்தனை வணங்கிடுவோம்

தேசியத் தலைவர்
நற்சிந்தனையில்
உதித்து வழி நடத்திய
ஆராதனையைப் போற்றிடுவோம்

வீட்டுக்கு வீடு பெற்று
எடுத்த பிள்ளையில்
கற்றுக் கொடுத்த
நாட்டுப் பற்றினை
பார் போற்ற புகழ்ந்திடுவோம்

நாட்டுக்குத் தன் பிறந்த
மண்ணிற்கு விடுதலை
வேண்டி உழைத்து உயிர் நீத்த மாவீரரே !

காந்தள் மலர் தூவி
மாவீரர் புகழ் பாடி
ஒளித் தீபமேற்றி
நினைந்திடுவோமே

வஞ்சனைச் சூழ்ச்சியே
நிந்தனை செய்த கொடுமையில்
அநியாயமாய்ப்
புதைந்தவரே

உன் கல்லறை கூட
உனக்கு சொந்தம்
இல்லையே
சொந்த மண்ணில் என
வடித்த கண்ணீர், விட்ட
இறுதிப் பெருமூச்சும்
கொடிய புயல், மழை,
இடியுடன் போராடி
ஓடுகிறதோ?

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading