நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

மாதவமே உன்னை!

நகுலா சிவநாதன்

மாதவமே உன்னை!

பாதகம் இல்லாப் பார்வையின் தரிசனம்
மாதவம் போலே மங்காத தியாகம்
வானவர் வாழ்த்த வருமொழி சேர்ந்திட
ஞானத்தில் ஒளிரும் நற்தீபம் கார்த்திகைத் தீபம்

கல்லறை தோறும் காரிருள் சூழ
கானகத்தின் ஒளிப்பிழம்பு தூரத்தெரிய
விண்மீன்கள் தண்னொளி பாய்ச்சிட
விளக்கும் தீபம் மாவீர மாதவமே!

மாதவம் உன்னை மானிடர்க் களிக்க
சேய்தவம் புரிந்த செங்காந்தள் மலர்விரிய
பாதகம் செய்வோர் தீமையின் பிடியினில்
பக்குவம் பேசும் வீரரின் தியாகம்
விண்ணுறை போற்றுமே!

நகுலா சிவநாதன் 1788

Nada Mohan
Author: Nada Mohan