” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மார்கழிக் குளிர்

நகுலா சிவநாதன்

மார்கழி குளிர்

மார்கழி குளிரது மனதை வாட்டுது
கார்கழி காலம் கவலையைக் கூட்டுது
நேர்வழி நடப்பு நேர்மையை காட்டுது
நெஞ்சினில் ஓர் நினைப்பு நிம்மதி கொடுக்குது

குளிரும் கூதலும் காலத்தின் நகர்வில்
பழியும் பாவமும் செய்கின்ற செயலில்
அளிக்கும் இன்பமும் அன்பென்ற சொல்லில்
களிக்கும் காலமும் கடிகார முள்ளில்

வருடத்தின் நிறைவை காட்டும் மாதம்
வந்தால் பனியும் மூசிப்பெய்யும்
பெருமையும் இதற்குண்டு பேராற்றல் கண்டு
அருமையும் அகத்தினுள் இன்பம் பூத்து

நகுலா சிவநாதன் 1789

Nada Mohan
Author: Nada Mohan