மார்கழியே மறக்குமா மனது..

வசந்தா ஜெகதீசன்
திங்களின் இறுதி திருப்பத்தின் உறுதி
வந்திடும் மாற்றம் ஆண்டெனப் பூக்கும்
பாலன் யேசுவின் பிரசவம் நிகழும்
பாரெங்கும் ஒளிக்குமிழ் வெளிச்த்தைப் பரவும்
ஒய்வில் மனங்கள் ஒத்தடம் தேடும்
நினைவில் ஏனோ நீங்காத கலக்கம்
அன்றைய பொழுதின் அவலத்தின் தேக்கம்
சுனாமி தந்த சுவட்டின் நெருக்கம்
சுக்கு நூறாகும் இதயத்தின் குறுக்கம்
இடரின் பிடியில் இன்னமும் வாழ்வு
இன்றும் இயற்கையின் தாக்கத்தில் உலகு
அன்னை மண் அவலத்தின் கோரமாய் பதிவுஎண்ணிட விம்முது இதயமே
நொருங்குது.
தொன்மையும் இன்றும் தொடரும்வலி
தொடர்கின்ற வாழ்விற்கு ஏது வழி!நன்றி

Author:

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading