மார்கழியே மறக்குமா மனது..

வசந்தா ஜெகதீசன்
திங்களின் இறுதி திருப்பத்தின் உறுதி
வந்திடும் மாற்றம் ஆண்டெனப் பூக்கும்
பாலன் யேசுவின் பிரசவம் நிகழும்
பாரெங்கும் ஒளிக்குமிழ் வெளிச்த்தைப் பரவும்
ஒய்வில் மனங்கள் ஒத்தடம் தேடும்
நினைவில் ஏனோ நீங்காத கலக்கம்
அன்றைய பொழுதின் அவலத்தின் தேக்கம்
சுனாமி தந்த சுவட்டின் நெருக்கம்
சுக்கு நூறாகும் இதயத்தின் குறுக்கம்
இடரின் பிடியில் இன்னமும் வாழ்வு
இன்றும் இயற்கையின் தாக்கத்தில் உலகு
அன்னை மண் அவலத்தின் கோரமாய் பதிவுஎண்ணிட விம்முது இதயமே
நொருங்குது.
தொன்மையும் இன்றும் தொடரும்வலி
தொடர்கின்ற வாழ்விற்கு ஏது வழி!நன்றி

Author:

வசந்தா ஜெகதீசன் இன்று பாரதி இருந்திருந்தால்... புதுக்கவியாளன் பாரதியே படைத்தெழு படைப்பே பாரெங்கும் முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...

Continue reading