” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மார்கழி வந்தாலே 692

Selvi Nithianandan

மார்கழி வந்தாலே

பகலவன் குறைந்து
பாதியாய் வந்துடும்
பரிதியும் கடந்து
பனியாய் மாறிடும்

தெருவோர மரங்களும்
பழுப்பாய் காட்சிதரும்
புற்களும் அழகாய்
வெண்மையாய் மாறிவிடும்

தென்றலும் இல்லாது
அமுக்கமாய் இருந்திடும்
தேகமும் சோர்வாய்
தூக்கமாய் வந்துவிடும்

இல்லமும் உள்ளமும்
விழித்தெழ வைத்திடும்
இருந்தும் மகிழ்ந்திட
இயற்கையும் நிலைக்கனும்

Nada Mohan
Author: Nada Mohan