மார்கழி வந்தாலே 692

Selvi Nithianandan

மார்கழி வந்தாலே

பகலவன் குறைந்து
பாதியாய் வந்துடும்
பரிதியும் கடந்து
பனியாய் மாறிடும்

தெருவோர மரங்களும்
பழுப்பாய் காட்சிதரும்
புற்களும் அழகாய்
வெண்மையாய் மாறிவிடும்

தென்றலும் இல்லாது
அமுக்கமாய் இருந்திடும்
தேகமும் சோர்வாய்
தூக்கமாய் வந்துவிடும்

இல்லமும் உள்ளமும்
விழித்தெழ வைத்திடும்
இருந்தும் மகிழ்ந்திட
இயற்கையும் நிலைக்கனும்

Nada Mohan
Author: Nada Mohan

சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

Continue reading