மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன்
மாற்றத்தின் ஒளியாய்

மாற்றத்தின் வரவாய்
மாட்சிமை நிறைவாய்
மங்காத ஒளியாய்
மனதும் குளிர்வாய்

தைமகளின் நகர்வாய்
திருநாளும்விரைவாய்
ஆதவன் கொடையாய்
அகமும் ஆனந்தமாய்

பொங்கல் சிறப்பாய்
பொருளுக்கு கூட்டமாய்
அங்காடி நெருசலாய்
அடிதடி சண்டையாய்

பட்டாசு சத்தமாய்
பதறுதோ புலம்பலாய்
பரிதிக்கும நன்றியாய் பவ்வியமாய் கழியுமே

செல்வி நித்தியானந்தன்

Author:

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading