மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273

மாற்றத்தின் ஒளியாய்..

ஆண்டு ஒன்றின்
அழகிய மலர்வில்
அத்தனை உளங்களில்
மாற்றத்தின் ஒளியாய்
இருளெனும் துயரது
இனி இல்லை என்றாகி
வரு பகை விலகி
வளமது சிறக்க
தமிழர் திரு நாள் தான்
தரணி மலர்ந்ததே..

முயற்சியின் அறுவடை
முழுமைப் பயனாய்
திறனின் மகிமை
திருப்பம் பலதாய்
ஏணியெனவும் ஏற்றம்
தொழில் நுட்ப உலகில்
தொலைவான மகிழ்வு
அருகே வருதலும்
மாற்றத்தின் ஒளியாய்
வேண்டும் பலனை
தருவதே சிறப்பாம்!!
சிவதர்சனி இராகவன்
15/1/2026

Author:

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading