சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

” மாவீரர் ஈகம் “

ரஜனி அன்ரன்

“ மாவீரர் ஈகம் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 21.11.2024

மாவீரர் ஈகம் மகத்தான தியாகம்
சாவுக்கு நாள் குறித்து
சரித்திரம் படைத்த பயணம்
தாய்த்தேசம் தனைமீட்க
தேசீயத்தின் கனவை நனவாக்க
தேகத்தையே ஈகம் செய்த
தேசமைந்தரின் தியாகமெல்லாம்
பேச வைக்குதே கார்கால கார்த்திகையில் !

உன்னத இலட்சியத்திற்காக
இலட்சியத்தின் வெற்றிக்காக
இறுதி மூச்சு வரை போராடி
உறுதியோடு மண்ணை முத்தமிட்ட
உன்னத மறவர்களின் ஈகம்
ஈடிணையில்லா வரலாற்றுக் காவியம் !

தாய்த்தேசத்தின் தாகம் தீர்க்க
தம்முயிரைப் பணயம் வைத்து
நீதியின் பாதையில் நடந்து
நெஞ்சினில் தீயினை ஏந்தி
புறநானூற்று வீரம் காத்து ஈகம் செய்த
புதுநானூறு படைத்த மறவருக்காய்
தீப ஒளியேற்றி விழிகளை ஒளிர வைப்போம் !

Nada Mohan
Author: Nada Mohan