முதல் ஒலித்தடமே

இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத் தொட்டெழுந்து
வீரிய நடையின் வீச்செறிந்தாய்

புலம் பெயர் வாழ்வின் சரித்த்திலே
மொழியொடு இதயங்கள் விரிந்தெழவே
அன்றவள் எழுந்தாள் உதயம் கண்டாள்
சூரிய உதயத்தை மொழியில் தந்தாள்

கனலொடு தமிழின் உராய்வுகளை
கணித்தவள் நிலைத்தனள் வான் ஒலியாய்
நித்திய முனைப்பு கொண்டவர் தாம்
ஏந்திய பெருந்தடம் நடப்பினிலே

ஆளுமை நிறைத்தவர் பலரிணைய
அணிவகுத்தனர் தாம் நடா மோகன் அவர் தம்முடனே
நீடிய பயணம் சரிதமென -இன்று
நிலைத்தது முதல் தடம் திகழ

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading