முதல் ஒலித்தடமே

இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத் தொட்டெழுந்து
வீரிய நடையின் வீச்செறிந்தாய்

புலம் பெயர் வாழ்வின் சரித்த்திலே
மொழியொடு இதயங்கள் விரிந்தெழவே
அன்றவள் எழுந்தாள் உதயம் கண்டாள்
சூரிய உதயத்தை மொழியில் தந்தாள்

கனலொடு தமிழின் உராய்வுகளை
கணித்தவள் நிலைத்தனள் வான் ஒலியாய்
நித்திய முனைப்பு கொண்டவர் தாம்
ஏந்திய பெருந்தடம் நடப்பினிலே

ஆளுமை நிறைத்தவர் பலரிணைய
அணிவகுத்தனர் தாம் நடா மோகன் அவர் தம்முடனே
நீடிய பயணம் சரிதமென -இன்று
நிலைத்தது முதல் தடம் திகழ

Author:

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading