” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

முதல் ஒலித்தடமே

இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத் தொட்டெழுந்து
வீரிய நடையின் வீச்செறிந்தாய்

புலம் பெயர் வாழ்வின் சரித்த்திலே
மொழியொடு இதயங்கள் விரிந்தெழவே
அன்றவள் எழுந்தாள் உதயம் கண்டாள்
சூரிய உதயத்தை மொழியில் தந்தாள்

கனலொடு தமிழின் உராய்வுகளை
கணித்தவள் நிலைத்தனள் வான் ஒலியாய்
நித்திய முனைப்பு கொண்டவர் தாம்
ஏந்திய பெருந்தடம் நடப்பினிலே

ஆளுமை நிறைத்தவர் பலரிணைய
அணிவகுத்தனர் தாம் நடா மோகன் அவர் தம்முடனே
நீடிய பயணம் சரிதமென -இன்று
நிலைத்தது முதல் தடம் திகழ

Author: