19
Mar
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
19
Mar
வேண்டாத போரும் தீண்டாத பழியும்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
வேண்டாத போரும் தீண்டாத பழியும்
வளைகுடா யுத்தம் வாட்டுது மக்களை
தலையெடுத்து வாழத் தடையாக...
“முதுமை போற்றி போற்றி”
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும் முதுமை முடி சூட
திரையென முளைத்தது முதுமை
அநுபவ விருட்சங்களாய்
பண்பாடுகளின் இருப்பிடமாய்
ஆயுள் நீட்சியின்அடையாளமாய்
குடும்பத்தின் பல்கலைக் கழகமாய்
இவர்களின் நினைவுப் பெட்டகங்களில்
புதைந்து கிடக்கும்
பழங்கால நினைவுகள்
பாதுகாக்கப்பட வேண்டிய
பொக்கிசங்கள்
இவர்கள் பூமிக்கு சுமையல்ல
பூமியைச் சுமந்து நின்ற
கடந்த கால சுமை தாங்கிகள்
நம் வாழ்க்கையில் கிடைத்த வரங்கள்
நம் இல்லத்தின் நாளாந்த
வாசிப்பிலும் நேசிப்பிலும்
நம்மோடு கூட இருக்க வேண்டிய
ஜீவ காவியங்கள் எனவே
முதுமையை போற்றுவோம்
வீட்டிலும் நாட்டிலும்
நன்றி
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...