அதிகாலை விடியல்..

சிவதர்சனி. இராகவன் வியாழன் கவிதை..2157 அதிகாலை வேளையிலே.. அசதியான தூக்கம் கலைக்கும் அழகான அதிகாலை வேளை கண்விழிக்கச் சொல்லும் குருவிகள் பாட்டொலி பட்டுத்தெறிக்கும்...

Continue reading

முள்ளி வாய்க்கால் நினைவு

ராணி சம்பந்தர்

முள்ளி வாய்க்கால் நினைவு தினம்
316
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
ஈழப்போரின் இறுதிக்
கட்டமது
பாழாய்ப் போன இனவெறித் திட்டமது
வாழவழிவிடாது அழித்த
கொட்டமது
தமிழன் என்றே துரத்தித் துரத்தி
முழுதாயக் கூறாக்க
கொத்துக் குண்டுகள்
வீசி உடல் சிதறிய
தினமது

மே 18 மறக்க முடியாத
வலியது
2009 இல் துறந்த பரிதாபப் பலியது
பதுங்கு குழி ஒதுங்கிய
பச்சிளம் பாலர், முதியோர் வரை கதறக்
கதற உடல் கிழித்து
சதை தொங்கக் கொன்று குவித்த
கூலிப்படையது

உயிரோடு புதைந்த
மாவீரர், வயிறு எரிய
சிதைந்த மழலை,
மாந்தர் சிதறிய உதிரம்
கொதித்தெழுந்த கருகிய உடல் சதை
பிழிந்து ரத்தம் குடித்தவரைப் பழி
வாங்குதே உலகெங்கும்.

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

Continue reading