திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

முள்ளி வாய்க்கால் நினைவு

ராணி சம்பந்தர்

முள்ளி வாய்க்கால் நினைவு தினம்
316
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
ஈழப்போரின் இறுதிக்
கட்டமது
பாழாய்ப் போன இனவெறித் திட்டமது
வாழவழிவிடாது அழித்த
கொட்டமது
தமிழன் என்றே துரத்தித் துரத்தி
முழுதாயக் கூறாக்க
கொத்துக் குண்டுகள்
வீசி உடல் சிதறிய
தினமது

மே 18 மறக்க முடியாத
வலியது
2009 இல் துறந்த பரிதாபப் பலியது
பதுங்கு குழி ஒதுங்கிய
பச்சிளம் பாலர், முதியோர் வரை கதறக்
கதற உடல் கிழித்து
சதை தொங்கக் கொன்று குவித்த
கூலிப்படையது

உயிரோடு புதைந்த
மாவீரர், வயிறு எரிய
சிதைந்த மழலை,
மாந்தர் சிதறிய உதிரம்
கொதித்தெழுந்த கருகிய உடல் சதை
பிழிந்து ரத்தம் குடித்தவரைப் பழி
வாங்குதே உலகெங்கும்.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading