அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

மூலதனம்..

வசந்தா ஜெகதீசன்

தேசங்கள் முழுதும் தேடப்படும்
தேவைகள் உணர்ந்து ஆளப்படும்
வாழ்வுக்கும் இதுவே அத்திவாரம்
வருமானத்திற்கும் வாழ்வு தரும்
உறவுக்குள் உரிமைக் குரல் எழுப்பும்
நல் நட்புக்கும் நம்பிக்கை
உரமாகும்
அறிவுக்கு கல்வியாய் அடிபதிக்கும்
அன்புக்கும் இதுவே அடிப்பலம்
கவிதைக்கும் கருவே மூலதனம்

அளப்பெரும் சேவையின் ஆதாரம்
காத்திடம் அறிந்து கருக்கொண்டு
காரியம் ஆற்றிடும் மூலதனம்
பணம் என்ற ஓன்று மட்டுமல்ல
பற்பல வளங்களும் மூலதனம்
உடலுக்கு உயிரே மூலதனம்
அன்பும் அறனும்
வேரென ஆளுமை நிறைக்குமே மூலதனம்.

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading