ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

மூலதனம்..

வசந்தா ஜெகதீசன்

தேசங்கள் முழுதும் தேடப்படும்
தேவைகள் உணர்ந்து ஆளப்படும்
வாழ்வுக்கும் இதுவே அத்திவாரம்
வருமானத்திற்கும் வாழ்வு தரும்
உறவுக்குள் உரிமைக் குரல் எழுப்பும்
நல் நட்புக்கும் நம்பிக்கை
உரமாகும்
அறிவுக்கு கல்வியாய் அடிபதிக்கும்
அன்புக்கும் இதுவே அடிப்பலம்
கவிதைக்கும் கருவே மூலதனம்

அளப்பெரும் சேவையின் ஆதாரம்
காத்திடம் அறிந்து கருக்கொண்டு
காரியம் ஆற்றிடும் மூலதனம்
பணம் என்ற ஓன்று மட்டுமல்ல
பற்பல வளங்களும் மூலதனம்
உடலுக்கு உயிரே மூலதனம்
அன்பும் அறனும்
வேரென ஆளுமை நிறைக்குமே மூலதனம்.

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading