இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

மொழியும் கவியும்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-46
23-01-2025

மொழியும் கவியும்

மொழியும் கவியும் இணைந்தே
மொழிக்கவி உனை புனைந்தே
விழியும் செவியும் விழித்தெழ
விமர்சனம் தரும் காவியமாய்

காலங்களை உணர்த்தி கவிசொல்லி
கருப்பொருளுடன் உணர்வு ஊட்டி
அமுதசுரபியாய் கரம் எடுத்து
அள்ளிப்பருகிடவும் குறையாதிது

கம்பன் சீராட்டி மூவேந்தர் பாராட்டி
கடந்தாலும் மொழிக்கடலில் ஈராயிரமாண்டு
இளமை குன்றாமல் இணையமெல்லாம்
இணையும் மொழியும் கவியும் நீ.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

Continue reading

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading