ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

மௌனத்தின் மொழி 74

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-10-2025

பேச்சை இழந்த பின்
பேசாத அத்தியாயம்
அலையற்ற கடலாய்
அமைதியின் நிலையாய்

மௌனத்தின் மொழியாய்
மனங்களின் உரையாடலாய்
சொல்லமுடியாமல் வார்த்தைகளை
சுமந்து துடிக்கும் சகபணித் தோழியே!

வேற்று மொழி பேசினாலும்
வேடம் அற்ற நேசிப்பினால்
பல கதைகள் பேசினோம்
பாசத்தை பரிமாறினோம்.

பணிஓய்வு காலம் உனை அணுக
பக்கவாதம் அணிந்ததுவே
மிக்க துயர் நெஞ்சடைக்க
மௌனமொழியை வரைகிறேன்.

உன் ஓசைகள் இழந்தாலும்
எண்ணங்கள் புரிகிறது
ஆசைகள் நிறைவேற
ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.

Jeba Sri
Author: Jeba Sri

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading