17
Sep
இரா.விஜயகௌரி
மொழியே முகவரி மொழித்திறன் விரல் வழி
எழுத்தே இலக்கென இழைத்திடல் எழில் வழி
கொடுத்தலில் விரித்தெழும்...
17
Sep
மொழியே அடையாளம்
சக்தி சிறினிசங்கர்
இனிது வாழ இன்றே முந்துவோம்
கனவு காணுதல் கடமையாய் எண்ணுவோம்
நனவாய் ஆக்க நாமும்...
17
Sep
மொழியே முகவரி
மொழியே முகவரி
மொழியே முகவரி
உயிரே என் தாய்மொழி
வழியே பேசும் வரலாறும் கூறும்!
வாழ்வாங்கு...
ரஜனி அன்ரன்
“ துளிநீர் “ கவி……ரஜனி அன்ரன் (B.A) 24.03.2022
நீலவானத் திரை விலத்தி
வான்மகளை முத்தமிட்டு
வானம் விட்டு மெல்லக் கீழிறங்கி
கதிரவன் ஒளியில் கண்சிமிட்டி
கடலலையில் மோதித் தெறித்து
காற்றின் வேகத்தில் திவலையாய் சிதறி
துளித்துளியாய் நிலத்தில் விழுமே மழைத்துளி !
அண்டத்தை எழுபது வீதத்தில் ஆட்சி செய்து
கண்டங்கள் எல்லாம் நிறைந்து
அகிலத்தை அசைத்தும் இசைத்தும் நின்று
துளிநீராய் மண்ணில் விழுந்து பெருவெள்ளமாகி
ஏரி குளங்களை நிறைத்து வனப்பாக்குமே
துளிநீரையும் வீணாக்காது மழைநீரைச் சேமித்து
புவித்தாய்க்கு வளம் சேர்ப்போம் !
வேளாண்மை செழிக்க விளைச்சல் பெருக
வழி காட்டுமே துளி நீர்ப்பாசனம்
இன்றும் உலகின் கடைக் கோடிகளில்
துளிநீரின்றி குடிநீருக்காக மக்கள் தவிப்பு
விழிநீர் துடைக்கும் துளிநீர்த் திவலையே
நீ இல்வையேல் நாம் இல்லையே
இன்னுயிர் காக்கும் உயிராயுதம் நீயே !
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...