ரஜனி அன்ரன்

“ அதனிலும் அரிதே “……..கவி……ரஜனி அன்ரன் (B.A) 07.04.2022

மாந்தர் பிறப்பு மண்ணிற்கு அரிது
வேந்தன் ஆட்சி வையகத்திற்கு அழகு
சுகநல வாழ்வே நீடு வாழ்விற்கு மெருகு
நிலையில்லா நீர்க்குமிழி வாழ்வில்
விலை மதிப்பில்லா மானிட உயிர்கள்
தொற்றின்றி வாழ்தல் அதனிலும் அரிதே !

சுற்றுச் சூழலைச் சுத்தம் செய்து
சுகாதாரம் தனைக் காத்து
சுத்தக் காற்றைச் சுவாசித்து
ஊட்டம் நிறைந்த உணவினை உண்டு
நாட்டத்தோடு நன்னீரை நன்றாய் அருந்தி
வாட்டம் போக்க உடற்பயிற்சி செய்து
காட்டமாக ஆரோக்கியம் பேணினால்
தேட்டமாக வாழலாம் தெம்போடு !

இயற்கையோடு இசைந்து வாழ்ந்து
வாழ்ந்த வாழ்விற்கு சான்றாகி
வாழ்வியலை வண்ணமாக்கி
வாழ்வோம் நோயின்றி வளத்தோடு
அதனிலும் ஆரோக்கிய வாழ்வோடு
உலக சுகாதார நாளே – எம்
வாழ்வாதாரத்தின் ஜீவாதார நாள் !

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading