ரஜனி அன்ரன்

“ அதனிலும் அரிதே “……..கவி……ரஜனி அன்ரன் (B.A) 07.04.2022

மாந்தர் பிறப்பு மண்ணிற்கு அரிது
வேந்தன் ஆட்சி வையகத்திற்கு அழகு
சுகநல வாழ்வே நீடு வாழ்விற்கு மெருகு
நிலையில்லா நீர்க்குமிழி வாழ்வில்
விலை மதிப்பில்லா மானிட உயிர்கள்
தொற்றின்றி வாழ்தல் அதனிலும் அரிதே !

சுற்றுச் சூழலைச் சுத்தம் செய்து
சுகாதாரம் தனைக் காத்து
சுத்தக் காற்றைச் சுவாசித்து
ஊட்டம் நிறைந்த உணவினை உண்டு
நாட்டத்தோடு நன்னீரை நன்றாய் அருந்தி
வாட்டம் போக்க உடற்பயிற்சி செய்து
காட்டமாக ஆரோக்கியம் பேணினால்
தேட்டமாக வாழலாம் தெம்போடு !

இயற்கையோடு இசைந்து வாழ்ந்து
வாழ்ந்த வாழ்விற்கு சான்றாகி
வாழ்வியலை வண்ணமாக்கி
வாழ்வோம் நோயின்றி வளத்தோடு
அதனிலும் ஆரோக்கிய வாழ்வோடு
உலக சுகாதார நாளே – எம்
வாழ்வாதாரத்தின் ஜீவாதார நாள் !

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading