ரஜனி அன்ரன்

“ வேண்டும் வலிமை “ கவி……ரஜனி அன்ரன் (B.A) 28.04.2022

வலிமையே வாழ்விற்கு உரம்
உடல்வலுவும் உளவலுவும்
ஒருங்கு சேர உண்டாகுமே வலிமை
வளமான வாழ்வினை உரமாக்க
சிறப்புக் குழந்தைகளைப் பொறுப்போடு வளர்க்க
பெற்றோர்க்கு என்றும் வேண்டுமே வலிமை !

தனித்தன்மை கொண்ட குழந்தைகளின்
தனித்துவத்தை அடையாளம் கண்டு
தனித் திறமைகளை வளர்க்கப்
பயிற்சிகள் பலதையும் கொடுத்து
எழுதப்பேச கதைக்க கற்றுக் கொடுத்தால்
மேதாவிகள் ஆக்கிடலாம் மேதினியில் !

சிறப்புக் குழந்தைகளின் திறன்களை வெளிப்படுத்த
தடைகளைத் தாண்டி நடைபோட
எதிர்நீச்சலோடு சமூகத்தில் போராட
பெற்றோர்க்கு வேண்டுமே வலிமை !

பாமுக அதிபரின் பாரிய பணியாக
அழகிய மலர்களை அரவணைத்து
அவர்களின் திறமைக்கு களம் கொடுத்து
ஆற்றல்களை ஆளுமைகளை பாமுகத்தில்
அரங்கேற்றி மகிழ்கிறார் வலிமையோடு !

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading