ரஜனி அன்ரன்

“ வெம்மையின் கொடுமை “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 21.07.2022

கோடையின் வெம்மை இங்கு
சோடை போக வைக்குது எமை
வாட்டி எடுக்குது வதையும் செய்யுது
வரலாறு காணாத அனலையும் கக்குது
அனல் காற்று வீசி பசுமையைத் தின்னுது
ஐரோப்பிய நாடுகளையும் அவலமாக்குது
வெம்மையின் கொடுமை வேதனை தருகுது !

உச்சி வெய்யில் சுட்டெரிக்க
குச்சி ஐஸ்சைத் தேடுது நாவும்
உச்சந்தலையும் விறைத்துவிட
உக்கிரமாய் எரிக்கிறான் உதயசூரியனும்
வியர்வைத் துளிகள் முத்துமுத்தாய் கொட்ட
விபரிக்க முடியாத புழுக்கம்
வீட்டுக்குள்ளே மக்களும் முடக்கம்
வெம்மையின் கொடுமை தாங்க முடியல !

அனல் வெப்பத்தில் பொசுங்குது பயிர்களும்
பட்சிகளும் ஒதுங்குது நிழல்களைத் தேடி
மக்களும் ஆற்றங்கரைகளை நோக்கி விரைந்தபடி
வெய்யில் காலத்து விடுமுறை
வியர்வையில் தோய்ந்தபடி விரயமாக
தருக்களும் இங்கு அசையாதபடி
மெளன அஞ்சலி செய்யுதே !

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading