மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

ரஜனி அன்ரன்

“ வெம்மையின் கொடுமை “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 21.07.2022

கோடையின் வெம்மை இங்கு
சோடை போக வைக்குது எமை
வாட்டி எடுக்குது வதையும் செய்யுது
வரலாறு காணாத அனலையும் கக்குது
அனல் காற்று வீசி பசுமையைத் தின்னுது
ஐரோப்பிய நாடுகளையும் அவலமாக்குது
வெம்மையின் கொடுமை வேதனை தருகுது !

உச்சி வெய்யில் சுட்டெரிக்க
குச்சி ஐஸ்சைத் தேடுது நாவும்
உச்சந்தலையும் விறைத்துவிட
உக்கிரமாய் எரிக்கிறான் உதயசூரியனும்
வியர்வைத் துளிகள் முத்துமுத்தாய் கொட்ட
விபரிக்க முடியாத புழுக்கம்
வீட்டுக்குள்ளே மக்களும் முடக்கம்
வெம்மையின் கொடுமை தாங்க முடியல !

அனல் வெப்பத்தில் பொசுங்குது பயிர்களும்
பட்சிகளும் ஒதுங்குது நிழல்களைத் தேடி
மக்களும் ஆற்றங்கரைகளை நோக்கி விரைந்தபடி
வெய்யில் காலத்து விடுமுறை
வியர்வையில் தோய்ந்தபடி விரயமாக
தருக்களும் இங்கு அசையாதபடி
மெளன அஞ்சலி செய்யுதே !

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading