கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ உழைப்பு “….கவி….ரஜனி அன்ரன்(B.A) 04.05.2023

உழைப்பின் வாசமே
உழைப்பாளிகளின் சுவாசம்
உடலை இயந்திரமாக்கி
உழைப்பை உரமாக்கி
உழைக்கும் வர்க்கமே
உன்னதமான உழைப்பாளிகள்
உலகம் இயங்க உயிர்கள் வாழ
உழைப்பாளிகளின் கடின உழைப்பே உறுதுணை !

உடலும் மனமும் வலுவடைய
மனிதனைப் பண்படுத்துவது உழைப்பு
தன்னம்பிக்கை உணர்வை ஊட்டி
சாதனைத் தடத்தினை எட்டிப்பிடிக்க
அச்சாரமானது உழைப்பு
வாழ்விற்கான அழைப்பே உழைப்பு !

இயற்கை கூட கற்றுத் தருகுது
உழைப்பு எனும் பாடத்தை
உதயசூரியன் உதித்தால் தான் வெளிச்சம்
வியர்வை சிந்தி உழைத்தால் தான்
விரைவில் கிட்டும் வெற்றிக்கனி
உழைப்பே உயர்விற்கு வழி
உழைப்பே நல்வாழ்விற்கு விழி !

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading