ரஜனி அன்ரன்

“ பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும் “…கவி..ரஜனி அன்ரன் (B.A)25.05.2023

அறிவுச் சுரங்கம் ஆசியாவின் பொக்கிஷம்
அனலுக்குள் பொசுக்கி சாம்பல் மேடாக்கி
ஆண்டுகள் நாற்பத்தியிரண்டும் ஆனதுவே
மாறாத வடுவின் நீச்சமிது
ஆறாத் துயரத்தின் உச்சமிது
நீறாக்கிப் போட்டனரே நீசர்கள் !

நாற்பத்தியிரண்டு ஆண்டுகளுக்குள்
நாலாவிதமான நிகழ்வுகளும் அரங்கேற
கலவரங்கள் புலம்பெயர்வுகள் எனத் தொடர
கண்டங்கள் ஐந்திலும் மக்களும் வாழ
கரம் கொடுத்து பலரும் உதவ
எரிந்த சாம்பல் மேட்டிலிருந்து
எழுந்து நிமிர்ந்து நிற்குதே
எழிலோடு புதுப்பொலிவோடு
இன்றும் அதேயிடத்தில் அறிவாலயம் !

வெந்து தணிந்தது வேரின் அடையாளம்
தீயில் பொசுங்கியது நூல்கள் மட்டுமே
தீராத அறிவிற்கு அழிவில்லை என்றும்
அடையாளம் அழிந்தாலும் அழியவில்லை அறிவு
அள்ளியே கொடுத்தனர் நூல்களை மக்களும்
பெருகியது படைப்புக்களும் படைப்பாளர்களும்
பூத்துக் குலுங்கியது மீண்டும் மிடுக்கோடு அறிவாலயம் !

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading