மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ தலைசாய்த்திடுவோம் மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய் “
……………கவி…ரஜனிஅன்ரன்(B .A) 24.11.2022…………

உலகையே விழிக்க வைத்து
உரிமைக்காய் வித்தாகிய உன்னதர்களை
காலநதியினில் கரைந்துவிட்ட காவியரை
மனிதம் நிமிர மண்மானம் காத்தவரை
மரணத்தை வென்றிட்ட வீரமறவர்களுக்காய்
தலை சாய்த்திடுவோம் என்றும் !

தாயகக் கனவினைத் தாகமாக்கி
தார்மீகத்தையே வேதமாக்கி
தேகத்தையே கொடையாக்கி
தேசவிடியல் ஒன்றையே நாதமாக்கி
வேதனைகளைத் தூரமாக்கி
வெந்தணழில் ஈகமாகி
செந்தணலாகிய வீரமறவர்களுக்காய்
தலை சாய்த்திடுவோம் என்றும் !

தியாகத்தை அர்ப்பணித்த தீரர்களை
மகாயாகத்தையும் வென்றிட்ட மறவர்களை
புதுநானூறு படைத்திட்ட புரட்சிவீரர்களை
சாவினை அணைத்திட்ட சரித்திரர்களை
சந்ததி வாழத் தம்முயிர் ஈய்ந்தவரை
தன்னலமின்றிய தியாகிகளை
தலைசாய்த்து வணங்கி நன்றிக்கடன் தீரவே
அவர் தலைமுறைக்காய் கரம் கொடுப்போம் !

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading