கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

ரஜனி அன்ரன்

“ தலைசாய்த்திடுவோம் மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய் “
……………கவி…ரஜனிஅன்ரன்(B .A) 24.11.2022…………

உலகையே விழிக்க வைத்து
உரிமைக்காய் வித்தாகிய உன்னதர்களை
காலநதியினில் கரைந்துவிட்ட காவியரை
மனிதம் நிமிர மண்மானம் காத்தவரை
மரணத்தை வென்றிட்ட வீரமறவர்களுக்காய்
தலை சாய்த்திடுவோம் என்றும் !

தாயகக் கனவினைத் தாகமாக்கி
தார்மீகத்தையே வேதமாக்கி
தேகத்தையே கொடையாக்கி
தேசவிடியல் ஒன்றையே நாதமாக்கி
வேதனைகளைத் தூரமாக்கி
வெந்தணழில் ஈகமாகி
செந்தணலாகிய வீரமறவர்களுக்காய்
தலை சாய்த்திடுவோம் என்றும் !

தியாகத்தை அர்ப்பணித்த தீரர்களை
மகாயாகத்தையும் வென்றிட்ட மறவர்களை
புதுநானூறு படைத்திட்ட புரட்சிவீரர்களை
சாவினை அணைத்திட்ட சரித்திரர்களை
சந்ததி வாழத் தம்முயிர் ஈய்ந்தவரை
தன்னலமின்றிய தியாகிகளை
தலைசாய்த்து வணங்கி நன்றிக்கடன் தீரவே
அவர் தலைமுறைக்காய் கரம் கொடுப்போம் !

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading