இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ரஜனி அன்ரன்

“ விடுமுறை வந்தாலே “ ……..கவி…..ரஜனி அன்ரன் (B.A) 20.07.2023

வாடையை விரட்டி வசந்தத்தைத் தந்த கோடை
கொடையாய் கிடைத்ததே எமக்கு
கோடை விடுமுறை வந்தாலே
கொண்டாட்டம் கும்மாளமென
கோவில் திருவிழாக்கள் களைகட்ட
குடும்ப விழாக்களும் கலகலக்க
பள்ளிக்கும் பணிக்கும் விடுப்பாக
குடும்பமாய் கூடிமகிழும் விடுமுறை காலமிது !

இயற்கை அழகை ரசித்து மகிழ
இயந்திர வாழ்விற்கு இடைவேளை கொடுக்க
இயற்கையோடு பொழுதைக் கழிக்க
உறவுகளோடு உறவாடி மகிழ
பயண அட்டையும் கைகொடுக்க
மகிழ்வாய் வந்ததே கோடை விடுமுறையும் !

வசந்த காலமதை சுகந்தமாக்கி
படகுப் பயணத்தை மேற்கொள்ள
சுற்றுலாத் தளத்தினைச் சுற்றிவர
சுமைகளை எல்லாம் இறக்கி வைக்க
வரமாய் கிடைத்தது கோடை விடுமுறை
கோடை விடுமுறை வந்தாலே கொள்ளை இன்பமே !

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading