பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ரஜனி அன்ரன்

எழுத்தறிவு இல்லையெனில்…..கவி…ரஜனி அன்ரன் (B.A) 07.09.2023

மொழிக்கு மூலாதாரம் எழுத்தே
எழுத்தே மொழிக்கு அணிகலன்
சமூகத்தின் ஆணி வேரே எழுத்தறிவு
மொழி பேசும் இனம் அழியாமல் இருக்க
எழுத்தறிவே அவசியம்
எழுத்தறிவு இல்லையெனில்
மொழியே அழிந்து விடும் !

பட்டறிவு பகுத்தறிவு பக்குவம் இருந்தாலும்
அறிவினைப் பெருக்க ஆற்றலை வளர்க்க
இலக்கினை அடைய இமயமாய் உயர
தகுதியைப் பெற தராதரத்தோடு வாழ
வேண்டும் எழுத்தறிவு !

எந்த மொழி என்றாலும்
எழுத வாசிக்க புரிந்துகொள்ள
தெரியாத நிலையே எழுத்தறிவின்மை
வறுமை போர்ச்சூழல் அரசியல் நெருக்கடிகளால்
தலைவிரித்தாடுகிறது எழுத்தறிவின்மை !

இணையவழி முன்னேற்றம் கணணிப் பயன்பாடு
உலகமயமாக்கல் தொழில்நுட்ப அபாரமென
நிறைவான காலகட்டத்தில் எழுத்தறிவின்மையென்பது
வெட்கப்பட வேண்டிய விடயமே !

Nada Mohan
Author: Nada Mohan