” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ சுனாமி “ கவி…..ரஜனி அன்ரன் (B.A) 28.12.2023

பிரளயத்தின் பினாமியே
பிரபஞ்சத்தை உலுக்கிய சுனாமியே
ஆழிப்பேரலையாகிச் சீறி
ஊழித் தாண்டவமாடி
அசுரப் பசியினைச் தீர்க்க
இலட்ச இலட்சமாய் உயிர்களையும் குடித்து
ஏப்பம் விட்ட சுனாமியே
நீ ஒரு பினாமியே !

காலாற நடந்த இடங்களைத் தளங்களை
காதலர்களின் உறைவிடங்களை
கடலோடு கதை பேசியவர்களை
கிளிஞ்சல்கள் பொறுக்கிய சிறார்களை
கரைவலை இழுத்தவர்களை கட்டுமரங்களை
கடலே தஞ்சமென வாழ்ந்தோரையும்
வாரிச் சுருட்டிச் சென்ற சுனாமியே
நீ ஒரு பினாமியே !

கடலடியில் இருந்து பேரலையாய் பாய்ந்து
உயிரினைக் குடித்தாய்
உடமைகளைச் சிதைத்தாய்
உணர்வினைப் பறித்தாய்
ஏப்பமும் விட்டாய் இன்று அமைதியாகி. விட்டாய்
இனியும் வந்துவிடாதே இன்னுயிர்களைப் பறித்துவிடாதே !

Nada Mohan
Author: Nada Mohan