28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
ரஜனி அன்ரன்
“ சுனாமி “ கவி…..ரஜனி அன்ரன் (B.A) 28.12.2023
பிரளயத்தின் பினாமியே
பிரபஞ்சத்தை உலுக்கிய சுனாமியே
ஆழிப்பேரலையாகிச் சீறி
ஊழித் தாண்டவமாடி
அசுரப் பசியினைச் தீர்க்க
இலட்ச இலட்சமாய் உயிர்களையும் குடித்து
ஏப்பம் விட்ட சுனாமியே
நீ ஒரு பினாமியே !
காலாற நடந்த இடங்களைத் தளங்களை
காதலர்களின் உறைவிடங்களை
கடலோடு கதை பேசியவர்களை
கிளிஞ்சல்கள் பொறுக்கிய சிறார்களை
கரைவலை இழுத்தவர்களை கட்டுமரங்களை
கடலே தஞ்சமென வாழ்ந்தோரையும்
வாரிச் சுருட்டிச் சென்ற சுனாமியே
நீ ஒரு பினாமியே !
கடலடியில் இருந்து பேரலையாய் பாய்ந்து
உயிரினைக் குடித்தாய்
உடமைகளைச் சிதைத்தாய்
உணர்வினைப் பறித்தாய்
ஏப்பமும் விட்டாய் இன்று அமைதியாகி. விட்டாய்
இனியும் வந்துவிடாதே இன்னுயிர்களைப் பறித்துவிடாதே !
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...