16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
ரஜனி அன்ரன்
“ மலையின் மாண்பு “ கவி…ரஜனி அன்ரன் (B.A ) 15.12.2022
வானம் குடைபிடிக்க
வையம் கம்பளம் விரிக்க
வைரப் போர்வை போர்த்தி
தலையில் கிரீடம் சூடி
வானளாவ உயர்ந்திருக்கும் மாமலையே
உன் மாண்பினைச் செப்பிட வார்த்தைகள் இல்லையே !
கானகத்தை காசினியைக் காக்க
நீ தூணாக நிற்கிறாய்
நோய் நொடிகளைத் தீர்க்க
மூலிகைகளைத் தந்து காக்கிறாய்
தாகம் தீர்த்திட அருவியாய் கொட்டுகிறாய்
மேகம் கூட மோகம் கொள்ளுது உன்னோடு !
இயற்கையின் அதிசயம் நீ
பிரமிப்பின் பிரவாகம் நீ
புரியாத புதிர் நீ பூமிப்பந்தின் கிரீடம் நீ
காற்றிற்கும் அஞ்சாத கல்நெஞ்சன் நீ
கல்லுக்குள்ளும் ஈரம் கொண்டவன் நீயே !
உனைப் பார்த்து நாம் வியக்க
பள்ளங்களைப் பார்த்து நீ நயக்க
நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் மலையே
மாமலையே உன் மாண்பு தான் என்னே !

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...