26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
ரஜனி அன்ரன்
“ மலையின் மாண்பு “ கவி…ரஜனி அன்ரன் (B.A ) 15.12.2022
வானம் குடைபிடிக்க
வையம் கம்பளம் விரிக்க
வைரப் போர்வை போர்த்தி
தலையில் கிரீடம் சூடி
வானளாவ உயர்ந்திருக்கும் மாமலையே
உன் மாண்பினைச் செப்பிட வார்த்தைகள் இல்லையே !
கானகத்தை காசினியைக் காக்க
நீ தூணாக நிற்கிறாய்
நோய் நொடிகளைத் தீர்க்க
மூலிகைகளைத் தந்து காக்கிறாய்
தாகம் தீர்த்திட அருவியாய் கொட்டுகிறாய்
மேகம் கூட மோகம் கொள்ளுது உன்னோடு !
இயற்கையின் அதிசயம் நீ
பிரமிப்பின் பிரவாகம் நீ
புரியாத புதிர் நீ பூமிப்பந்தின் கிரீடம் நீ
காற்றிற்கும் அஞ்சாத கல்நெஞ்சன் நீ
கல்லுக்குள்ளும் ஈரம் கொண்டவன் நீயே !
உனைப் பார்த்து நாம் வியக்க
பள்ளங்களைப் பார்த்து நீ நயக்க
நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் மலையே
மாமலையே உன் மாண்பு தான் என்னே !

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...