ரஜனி அன்ரன்

“ மலையின் மாண்பு “ கவி…ரஜனி அன்ரன் (B.A ) 15.12.2022

வானம் குடைபிடிக்க
வையம் கம்பளம் விரிக்க
வைரப் போர்வை போர்த்தி
தலையில் கிரீடம் சூடி
வானளாவ உயர்ந்திருக்கும் மாமலையே
உன் மாண்பினைச் செப்பிட வார்த்தைகள் இல்லையே !

கானகத்தை காசினியைக் காக்க
நீ தூணாக நிற்கிறாய்
நோய் நொடிகளைத் தீர்க்க
மூலிகைகளைத் தந்து காக்கிறாய்
தாகம் தீர்த்திட அருவியாய் கொட்டுகிறாய்
மேகம் கூட மோகம் கொள்ளுது உன்னோடு !

இயற்கையின் அதிசயம் நீ
பிரமிப்பின் பிரவாகம் நீ
புரியாத புதிர் நீ பூமிப்பந்தின் கிரீடம் நீ
காற்றிற்கும் அஞ்சாத கல்நெஞ்சன் நீ
கல்லுக்குள்ளும் ஈரம் கொண்டவன் நீயே !

உனைப் பார்த்து நாம் வியக்க
பள்ளங்களைப் பார்த்து நீ நயக்க
நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் மலையே
மாமலையே உன் மாண்பு தான் என்னே !

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading