முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில் மூலையில் முடங்கி கிடக்கும் நிலை கண் தெரியாத பாவியாகி விட்டேன் கைப்பிடித்து தெருவில்...

Continue reading

ராணி சம்பந்தர்

28.03.2023
ஆக்கம் 96
நீர்க்குமிழி

விண்ணில் இருந்து
மண்ணிற்கு மழைத் துளி எனும் பெயரோடு
வீரியத்துடன் விரைந்து வந்ததே நீர்க்குமிழி

கண்ணில் பட்டதும்
காணாமல் கரைந்து போனதே

பள்ளிச் சிறுவர் ஊதிய சவர்க்கார நுரையில்
பெருத்த நீர்க்குமிழி
பொத்தென வெடித்துக்
காற்றோடு கலந்து
பறந்து போனதே

நினைவுகள் சுமந்த
கனவோடு காலை மாலை அலுப்பின்றி
வேலை செய்த விவசாயியில் பூத்த
வியர்வை எனும் நீர்க்குமிழி ஒரு
நொடிப்பொழுதில்
மறைந்து போனதே

நிரந்தரமற்ற நீண்ட
வாழ்வும் கூட பரந்த
உலகில் பிறந்த மனிதனில் நீர்க்குமிழி
போல் மண்ணில்
மறைந்து புதைந்து
போகுமே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading