தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

06.06.23
கவி ஆக்கம் -105
ஆறுமோ ஆவல்

ஆறுமோ ஆவல் -என்றும்
தேறுமோ அறை கூவல்

நாறியே சாவல் -இனறும்
நாற்றிசையும் குறை கூறல்

அதிகாலை கூவும் சேவலும்,
அம்மா என அலறும் பசுவும்,
நன்றியான நாயும்,ஆடு,
பூனையும் நியாயம் கூறிடுமோ

முழுமூச்சாய் உழைத்த முதுசமோ
கழுதை உண்ட கடதாசி ஆயிடுச்சு

விழுதாய் ஊன்றிய சாமி
முழுதாய் புத்தர் பூமியாய்
மாறிடுச்சு

உழுது உண்ட வயலோ
பழுதான உரமோடு
பூச்சி புழு உண்டு
பூகம்பம் போலாயிடுச்சு

ஆவலோடு ஆவலாய்க்
காத்திருககும் அன்றைய வாழ்வு
இன்றும் தோன்றிடுமோ
இல்லை மீண்டும் நாறிடுமோ

ஆறுமோ ஆவல்
கூறுமோ ஏவல்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading