” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

13.06.23
கவி இலக்கம் -106
மணி

அருமையான தலைப்பு
கருவோடு சேருமிடமோ
மாணிக்கம்

மனுநீதிச் சோழனில் ஆராய்ச்சி மணி
சேதி சொல்வதில் கோயில் மணி

ஒளி விளக்கில் தூண்டா மணி
வழியில் துரத்த சைக்கிள் மணி

ஒரு குண்டு மணிகூட இல்லை
எனப் பிதற்றியதே
அதிமதுர வெள்ளைக் குண்டு மணி
ஆனதே

சிவப்பு விதையின் குன்றி மணி 2
ஒரு மஞ்சாடி ஆகி எடையில் பேர்
போனதே

சிரிப்பொலிக்கு கவுண்டா மணிக்
கவுண்டரே
குண்டானதில் போண்டா மணி
குண்டு மணி ஆனாரே

பணத்திலும் பேரெடுத்த
மணியே மணியாயனதே

அனைத்திலும் சிறந்த மணியே
அன்பு,பண்பு,பாசம், குணம்
நிறைந்து மணி மகுடத்தில் எமை
ஏந்திய மணியம் எனும் பெயரோடு
ஊர்,பேர் போற்றும் எம் தந்தை
மாணிக்கமே .

Nada Mohan
Author: Nada Mohan