20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
14.09.23
கவி இலக்கம்-283
விழி பிதுங்கும் உடல்
பூவுலகில் பிறந்ததும்
இவ்வுடம்பு படும்பாடு
பாழாய்ப் போன பழக்க-
வழக்கம் தோளில் சுமக்க
அடம் பிடித்திட
நாளும் பொழுதும் வேணும்
வேணுமென வருந்தி
உழைத்து கொடிய நோயில்
உழுதுண்ட மண்ணில்
உரமாயிட
கழு மரத்திலேறிக் கதி
கலங்குமளவு மீறிய ஆசை
பசுமரத்தாணியாய்ப்
பதிந்திட
இருப்பதை விட்டுவிட்டு
இல்லாததற்கு ஏங்கி
இங்குமங்கும் சிறகு
விட்டுப் பறந்திட
எது வேண்டும் மனிதா
உனக்கு அதுவோ
சிந்தியாது உறக்கம்
இன்றி விழி பிதுங்கும்
உடல் எதற்கு ?
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.