ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

14.09.23
கவி இலக்கம்-283
விழி பிதுங்கும் உடல்

பூவுலகில் பிறந்ததும்
இவ்வுடம்பு படும்பாடு

பாழாய்ப் போன பழக்க-
வழக்கம் தோளில் சுமக்க
அடம் பிடித்திட

நாளும் பொழுதும் வேணும்
வேணுமென வருந்தி
உழைத்து கொடிய நோயில்
உழுதுண்ட மண்ணில்
உரமாயிட

கழு மரத்திலேறிக் கதி
கலங்குமளவு மீறிய ஆசை
பசுமரத்தாணியாய்ப்
பதிந்திட

இருப்பதை விட்டுவிட்டு
இல்லாததற்கு ஏங்கி
இங்குமங்கும் சிறகு
விட்டுப் பறந்திட

எது வேண்டும் மனிதா
உனக்கு அதுவோ
சிந்தியாது உறக்கம்
இன்றி விழி பிதுங்கும்
உடல் எதற்கு ?

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading