இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

21.09.23
கவி இலக்கம் 284
தியாகமே தீர்ப்பானதா

கண்ணகி கொதித்தெழுந்ததால்
காவியம் உருவாகிடுச்சு

மெழுகுதிரி தன்னையே உருக்கி
ஒளித் தீபமாயிடுச்சு

மரமானது பூத்துக் காய்த்து
கனியானது விதையாகி
மண்ணுள் புதைந்து முளைத்து
விருட்சமாயிடுச்சு

எந்தக் கஷ்டமும் பாராது
தாயானவள் பத்து மாதம்
கரு சுமந்ததால்தான் சிசு
உருவாயிடுச்சு

தாய்மண் நேசித்தவன்
சொட்டு நீர் ஆகாரமின்றி
நல்லூர் முன்றலில்
தீபச்சுடர் தியாகியானதால்
ஓவியம் உருவாகிடுச்சு

பல நாடெங்கும் தெரிஞ்சிடுச்சு
தியாகத்தின் பதில் விரைவில்
தீர்ப்பாகிடுமே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading