ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

10.10.23
கவி இலக்கம்-118
அலை ஓசை

ஆசை எனும் புயலில்
ஆணிவேர் சிக்கியதே
ஓசை காணும் அசலில்
கவி நயம் விளம்பியதே

மெத்தைக் கடலின் சொத்தென
குத்துக் கரணமுடன் ஆழம்
பார்க்குதே

முத்து முத்தான நுரையுடன்
பார்த்துப் பார்த்து வானளாவு
எழும்பி விழுந்து விளையாடி
முத்துக்குளியல் போடுதே

மழை நீர் கலக்க இடி மின்னல்
துலக்க வெடி வெடிப்பினும்
கவலையின்றி இடி முழங்குதே
அலை ஓசை

பட்டும் படாமல் கரை தொட்டு
விட்டுப் போகாமல் சொந்த மண்
நலம் விசாரித்து சுகம் பெற்ற
இன்பமுடன் அமைதியாய்
வீடு திரும்புதே அலை ஓசை .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading