இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

10.10.23
கவி இலக்கம்-118
அலை ஓசை

ஆசை எனும் புயலில்
ஆணிவேர் சிக்கியதே
ஓசை காணும் அசலில்
கவி நயம் விளம்பியதே

மெத்தைக் கடலின் சொத்தென
குத்துக் கரணமுடன் ஆழம்
பார்க்குதே

முத்து முத்தான நுரையுடன்
பார்த்துப் பார்த்து வானளாவு
எழும்பி விழுந்து விளையாடி
முத்துக்குளியல் போடுதே

மழை நீர் கலக்க இடி மின்னல்
துலக்க வெடி வெடிப்பினும்
கவலையின்றி இடி முழங்குதே
அலை ஓசை

பட்டும் படாமல் கரை தொட்டு
விட்டுப் போகாமல் சொந்த மண்
நலம் விசாரித்து சுகம் பெற்ற
இன்பமுடன் அமைதியாய்
வீடு திரும்புதே அலை ஓசை .

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading