ஏரிக்கரைப் பூங்காற்றே

சிவரூபன் சர்வேஸ்வரி ஏரிக்கரைப் பூங்காற்றே ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே பொங்கும் கடலின்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

17.10.23
கவி இலக்கம் -119
மீண்டெழு

வானும் மண்ணும்
போரிலே இழந்தது
தேடலின்றிக் கூறுமே

வாழ முடியாத தமிழன்
மூழ்ந்து மடியும் போது
பொங்கிப் பாயும்
வேங்கையாய்ச் சீறுமே

குட்டக் குட்டக் குனிந்து
திட்ட நரிக் கூட்டத்தில்
வளைந்து நுழைந்து
நெளிவது நாறுமே

வாள் வெட்டும்
தேள் கொட்டும் போதையும்
பாள்பட்டு வீழும் குடியும்
கூத்தாடியும் வாகன விபத்தும்
அடிக்கடி தாகமாய்
ஆளைக் குடித்து வேறாகுதே

பதிந்த சுவடுகள் மறைந்து
சுதந்திரமாய் மாந்தர்
நிறைந்து வாழ வியந்திடும்
உலகம் போற்ற வீறு கொண்டு
மீண்டும் எழு மீண்டெழு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading