இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

24.10.23
கவி இலக்கம்-120
ஆறு மனமே ஆறு

பல நூறு ஆயிரம் துன்பமது
பொல பொலவென வழியும்
கண்ணீரே பதில் கூறு

காலை முதல் மாலை வரை
குடிக்கப் பாலோ உண்ண
உணவோ அன்றி சேலைத்
தலைப்பைச் சுவைத்தபடி
தூங்கும் மழலை கூறுது

காணாமல் போனோர்
கண்டு பிடியாது குழி
புதைந்த சேறு

தீராத பேராசை மாறாத போதை
சேராத மதுக்கிண்ணம்
பாராத திண்டாட்டம்

முக்கி முக்கி மூட்டை தூக்கினும்
நிம்மதியாய் உண்பது சோறு

மாறாத மந்திரி தேறாத அரசியல்
தீர்வு காணாத கதிரையில்
குதிரைச் சவாரி சாறு நாறுது

பாரினில் வெடிக்குது
போரினில் துடிக்குது
நாறு நாறாய்க் கிழியுது
பூகம்பம்

தேனூறச் சேர்த்தவை
தாறுமாறாய் வெடித்துச்
சிதறுது பாரு பாரு
கூறு இனமே கூறு
ஏனிந்த இரத்த ஆறு
ஆறு மனமே ஆறு
ஆறு மனமே ஆறு

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading