சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

24.10.23
கவி இலக்கம்-120
ஆறு மனமே ஆறு

பல நூறு ஆயிரம் துன்பமது
பொல பொலவென வழியும்
கண்ணீரே பதில் கூறு

காலை முதல் மாலை வரை
குடிக்கப் பாலோ உண்ண
உணவோ அன்றி சேலைத்
தலைப்பைச் சுவைத்தபடி
தூங்கும் மழலை கூறுது

காணாமல் போனோர்
கண்டு பிடியாது குழி
புதைந்த சேறு

தீராத பேராசை மாறாத போதை
சேராத மதுக்கிண்ணம்
பாராத திண்டாட்டம்

முக்கி முக்கி மூட்டை தூக்கினும்
நிம்மதியாய் உண்பது சோறு

மாறாத மந்திரி தேறாத அரசியல்
தீர்வு காணாத கதிரையில்
குதிரைச் சவாரி சாறு நாறுது

பாரினில் வெடிக்குது
போரினில் துடிக்குது
நாறு நாறாய்க் கிழியுது
பூகம்பம்

தேனூறச் சேர்த்தவை
தாறுமாறாய் வெடித்துச்
சிதறுது பாரு பாரு
கூறு இனமே கூறு
ஏனிந்த இரத்த ஆறு
ஆறு மனமே ஆறு
ஆறு மனமே ஆறு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading