20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
31.10.23
கவி இலக்கம் -121
மாவீரரே
மண்ணின் விடுதலைக்காக
உயிரோடு புதைந்த மாவீரரே !
கண்ணில் விளைந்த
இமயச் சோகமதில்
இரத்தக் கண்ணீர்
சிந்துதே
எத்தனை காலந்தான்
மாந்தர் ஏமாறுவது
அத்தனை சித்தப்-
பிரமை முந்துதே
அடுத்த சந்ததியும்
நாமே நாமே
கொடுத்த வாக்குறுதியும்
வருதே வருதே என்று
மானமில்லா மரங்கள்
ஊனமுள்ள ஊஞ்சலில் குந்தி
குதூகலம் பாடுதே
கடுகடுத்த நீதி நடுத் தெருவிலே
நாறுநாறாய்க் கிழித்தது காணப்
பொங்கி எழுந்து வாருங்கள்
மிதமிஞ்சிய உயிர் காத்திடுவீர்
மாவீரரே .
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.