இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

09.11.23
கவி இலக்கம் -290
ஒளியின்றி ஒளிர்வெங்கு

ஒளியெங்கும் மலர்ந்தும்
இருளெங்கும் இன்றுந் தொடருதே

வாழ்வோ கண்ணீர் போராட்டம்
சாவோ மண்ணீரில் சூறையாட்டம்
சூழல் சுமையோ சுழலோடு சுடர்
அணையாட்டம்

தீபாவளி வந்திடின் கொண்டாட்டம்
கார்த்திகைத் தீபமிடின்
குத்தாட்டம்

போரிலே மாண்டும் தோண்டி
முடியா உண்மைகளில்
தவிக்கும் மனிதருக்கோ
இது ஏன் வருகுதெனத்
திண்டாட்டம்

பட்டினியால் இறக்கும்
மனிதருக்கு ஒரு நேர
உணவழிக்க வக்கின்றி
தமிழன் தலையில் மிளகாய்
அரைக்க அண்டை நாடடில்
மீண்டும் தில்லுமுல்லாட்டம்

முடிவிலா வாழ்வில் நீதிக்குத்
தீபமேற்றினும் ஒளியில்லா
வாழ்வு வினவுதே வினாவுதே
ஒளியின்றி ஒளிர்வெங்கு
என்பதே .

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading